குழந்தை வரம் கொடுக்கும் நவநாத சித்தர்
கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனால்தான், கோவில்கோவிலாக செல்பவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களுக்கு தரிசனம் செய்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது பலர் அறியாத உண்மை. ஈழத்தின் நான்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருக்கின்றன. வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிற் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரைதீவில் சித்தானைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப்பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன. நாவலப்பிட்டி நகரில் இருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் தான் குயின்ஸ் பெரி. இங்கு தான் நவநாத சித்தர் ஆலயம் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒன்பது இடத்தில் இருக்கும் வல்லமைக் கொண்ட நவநாத சித்தரின் இலங்கை வருகை முற்