நவநாத சித்தர்கள்: 2

நவநாத  சித்தர்கள்: 

1. அகத்தியர்


சித்தர்களில் முதன்மையான சித்தராகவும் நவகோடி சித்தர்களுக்கும் குருவாகவும் திகழ்பவர் "குறுமுனி" என்று அழைக்கப்படும் அகத்தியர் ஆவார். வேதகாலத்து சப்தரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப்படுகிறார். பழந்தமிழ் பாடல்களிலும், தேவாரம் முதலிய பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புகள் காண கிடைகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைபிடித்தவர் அகத்தியர். இவரது துணைவியாரின் பெயர் லோபமுத்திரை தாயார் மற்றும் இவரது மகனின் பெயர் சங்கரன்.

உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுகள் பற்றி இவரின் "சமரச ஞானம்" என்னும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

எழுதிய நூல்கள்: அகத்தியர் ஐந்து சாத்திரம், அகத்தியர் கிரியை நூல், அகத்தியர் அட்டமா சித்து,அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம் ,வைத்திய 4600, வைத்திய கண்ணாடி, கர்ம வியாபகம், மற்றும் பல...

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் ஜீவசமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது.


2. காகபுஜண்டர் 



ஸ்ரீ காகபுஜண்டர் காகத்தின் வடிவில் இருந்து பல்வேறு காட்சிகளையும் அனைத்து யுகங்களின்முடிவுகளையும் மாற்றங்களையும் கண்டவர் என்பதை "காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டுகாகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்" என இவரின் பாடலின் மூலமாகவே அறியலாம்எண்ணற்றயுகங்கள் தோன்றி அழிந்ததை இவர் பார்த்திருக்கிறார் என்பதை இவர் இயற்றிய பின் வரும் பாடலால் அறியமுடியும்.

"தேசமொன்று மில்லாமல் மவுனமுற்று
  சிறப்பாக எத்தனையோ யுகங்கள் கண்டு 
  வேதமென்ற பிரம்மத்தி லடங்கிக் கொண்டு 
  வெகு கோடியுகங்கள் வரை இருந்திட்டேனே"

இவ்வாறு பல யுகங்கள் கண்டு அழிவில்லாமல்  வாழ்வதால் நவகோடி சித்தர்களிலேயே ஸ்ரீ காகபுஜண்டர்ஒருவர்தான் "சிரஞ்ஜீவிஎன்று அழைக்கப்படுகிறார்இவர் துணைவியாரின் பெயர் ஸ்ரீ பகுளாதேவி தாயார்.இவரை ரோம ரிஷியின் தந்தை எனவும்இவர் வசிஷ்ட முனிவரைப் பார்த்த பொழுது "என் காலத்திற்குள்உம்மைப் போல் எட்டு வசிட்டர்களைக் கண்டேன்என்று சொன்னதாகவும் கூறுவர்.

இவர் தன உடம்பை ஒலி ஒளி வடிவத்தில் மாற்றிகொண்டதாகவும் இதுவரை இவர் ஆயிரம் பிறப்பெடுத்துஅத்தனை பிறப்பிலும் ஒரு மகானாக இவ்வுலக மக்களுக்கு அருள் புரிந்து வழி காட்டியுள்ளார் எனவும்கூறுவர்.

3. தன்வந்திரி
4. போகர்
5. வசிஷ்டர்
6. கௌசிகர்
7. பிருகு

உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர்.பிருகு என்னும் சொல்லுக்குகடுமையான தவசக்தியால் பாவங்களைப் பாசுக்குபவர் என்று பொருள்.பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றனபிருகு மகரிஷி கியாதிஎன்ற பெண்மணியை மணந்து கொண்டார்இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள்.பின்விஷ்ணுவை மணந்து கொண்டாள்இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு மாமனார் என்றபெருமை பெற்றவர் இவர்பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது.மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது.இதற்கு பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர்இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும்பகுதியாக அமைந்துள்ளதுகடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார்.சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார்இந்தக் கதைகளைக் கேட்டுஉலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார்இவர் இல்லாவிட்டால்புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காதுஎன்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரியமார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான்விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும்இவரது வம்சத்தில் தான் அவதரித்தார்பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்குபார்கவ ராமன் என்ற பெயரும் உண்டுவிருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம்கொடுத்துதன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரேஜனமேஜயர்செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான்இப்படி புராணங்களில்இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்.பிருகு மகரிஷி புலோமா என்றபெண்ணையும் மணந்தார் . இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள்அவளைக்கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர்அதோ பார்அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக்கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர்.

விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர்ஆனால்மரத்தில் இருந்த பிரம்மராட்சதன்இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான்புலோமாவிற்கு திருமணவயது வந்தது.பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்ததுஇதை அறிந்த ராட்சதனுக்கு கடும்கோபம் உண்டானதுபுலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக்கொண்டான்இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன் மனைவிக்கு பாதுகாப்பு தேடினார்நிறைமாதகர்ப்பிணியாக இருந்த புலோமாவைதான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன்சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார்அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயேதங்கவேண்டியிருந்தது.ஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக நதிக்கரைக்குகிளம்பினார்அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தான் . இதுதான் சரியானசந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன்ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான்எதிர்ப்பட்ட அக்னியிடம்பவ்யமாக பணிந்துசுவாமிநீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள்புலோமாவின் பெற்றோர் தன்பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா?இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகி விட்டாள் ! என்று நியாயம் பேசினான்அவனதுவிதண்டாவாதத்தைக் கேட்ட அக்னிதன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள்,திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்ப இயலாதுஎன்று மறுத்து விட்டார்பிரம்ம ராட்சதன்கோபாவேசமாக எழுந்தான்இவள் என் மனைவிநான் இவளைத் தூக்கிச் செல்வேன்என்று புலோமாவைப்பலவந்தப்படுத்தினான்அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள்அவள் ராட்சதனின்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள்.

அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததுஅந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது.அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான்பிருகு தன்அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார்நடந்த விஷயங்கள் அவருடையஞானதிருஷ்டியில் தெரிந்தனதன் மனைவி புலோமாவையும்தேஜஸ் நிறைந்த குழந்தையும் வந்துபார்த்தார்தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானதுஅக்னிநீயாகத்தீயாகவும்அடுப்புத் தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய்இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப்பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையைஅடைவாய்மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள்என்று சாபமளித்தார்.மனம் வருந்திய அக்னிக்குஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா.  அக்னியேஉனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே.இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும்மனிதர்களும் உலகத்திற்குதேவையில்லாதவர்களாகவே இருப்பர்அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில்உன்னால் பொருட்களையும்உயிரையும் இழப்பர்எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியைவிருப்பத்தோடு செய்உன்னால் உலகம் நன்மை பெறுவதாகஎன்று ஆறுதல் சொல்லி தேற்றினார்.புலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர்சிசுவாக இருந்தபோதேதேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டுஒருமுறை பிருகு மகரிஷி,மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மாவிஷ்ணுசிவன்மூவரையும் காணச் சென்றார்பிரம்மாவும்சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால்சாபம் பெற்றனர்பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனதுசிவன் லிங்கவடிவம் பெற்றார்ஆனால்,விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப்பணிந்து நின்றார்அதனால்மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு.ஜோதிடம்ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் பலகாணப்படுகின்றனபிராமண சமுதாயத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்ற கோத்திரத்திற்கு மூலபுருஷராகஇருப்பவர் இவர்.

8. நந்தீசர்

9. சுகபிரம்மர் 

குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் செய்து  கொண்டிருந்தார். அப்போதுகிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர்தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார்.  கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால்சாபத்திற்கு ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள். நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்றன. தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூடவியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவேஅந்தக் கிளியை கர்ப்பமாக்கியது.மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். (வேறு சில வழிகளில் ஹோமகுண்டத்தில் அவர் பிறந்தார் என்றும் சொல்வதுண்டு) அப்பிள்ளை தான் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர்.குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமாவியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக தேவகுரு பிரகஸ்பதி சுகருக்கு வேதங்களைக் கற்பித்தார்.
சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள்அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோதுவிஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார். பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்துஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போதுவழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். ஆனால்காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்துகாட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலைஅங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய்என்று சபித்துவிட்டான். உடனடியாக பரீட்சித்து தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான். தகவல் அறிந்த அத்ரிவசிஷ்டர்பிருகுஆங்கிரசர்பராசரர்தேவலர்பரத்வாஜர்கவுதமர்அகத்தியர்வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.

உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில்சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால்அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவதுகிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர்அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் என்னும் நூல் ஆயிற்று. இவரைப் பற்றிய இன்னொரு சம்பவமும் சுவையானது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதைதெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள்.  திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்குகுறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை.  அனைவரும் திகைத்து நின்ற வேளையில்எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும்அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும்புண்ணியமும் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

145 சித்தர்கள்

#2 மஹா சித்தர்கள்

பலப்ப்பல 18 சித்தர்கள்