இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. பௌத்த மஹாசித்தர்கள் : ஹடயோகப்ரதீபிகா [7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது [8] . ஆதிநாத மச்சேந்திர சாவர ஆனந்தபைரவ சௌரங்கி மீனநாத கோரக்கநாத விருபாக்ஷ பிலேசயா மந்தான பைரவ சித்திபுத்த கந்தடி கோராம்தக சுரானந்த சித்தபாத சர்பதி கானேரி பூஜ்யபாத நித்யானந்த நிரஞ்சன கபாலி பிந்துநாத காகசண்டீஸ்வர அல்லாம பிரபுதேவ கோட சோலி திமிந்தி பானுகி நாரதேவ கண்டகாபாலிக அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என
Comments
Post a Comment